• All
  • Why not Congress ?
gravatar

சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் உறுதிமொழி

வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர்.


நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.


Read more...
gravatar

காங்கிரஸை 63 இடங்களிலும் வீழ்த்த பிரசாரம்: சீமான்


சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்காக தொடர் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், " சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம்.


Read more...
gravatar

ஏன் களையெடுக்கனும்?

1.ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கண்டிக்காமல் முழு ஆதரவு நல்கியது. விடுதலைப் புலிகள் போன்றவற்றில் பல்வேறு வகையான கருத்து வேறுபாடுகள் இருந்த்தாலும் பொதுமக்கள் கொத்துகொத்தாய் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நடுவண் அரசாகிய காங்கிரசு. இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேயை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல், மாறாக காமன்வெல்த் போட்டியின் போது சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து உலகம் பார்க்கும் குற்றவாளியை நம் உணர்வை மதியாது போற்றியதற்கு தகுந்த பாடம் இந்தத் தேர்தல் தான்..


Read more...
gravatar

கலைஞருக்கு ஒரு திறந்த மடல்!

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்!

என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட

தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!


Read more...